14 Jan 2010

தை மகளே வருக...தரணியெல்லாம் செழிக்க...

  சருகான இலையெலாம்

காற்றோடு போகட்டும்

தளிரெல்லாம் தழைக்கட்டும்

சதிராடி வெல்லும்

அநியாயம் அழியட்டும்

தருமம் வெல்லட்டும்

திருந்தா மனங்கள்

இனியேனும் திருந்தட்டும்

தெளிவோடு இருக்கட்டும்

சிங்காரத் தமிழன்னை

கம்பீரம் கொள்ளட்டும்

செங்கோல் ஏந்தட்டும்

கருவான மேகங்கள்

தவறாமல் பெய்யட்டும்

கண்ணீர் நிற்கட்டும்

கையேந்தும் பழக்கங்கள்

தொலையட்டும் மறையட்டும்

கவலைகள் ஒழியட்டும்

புருவங்கள் உயரட்டும்

புன்னகை மலரட்டும்

பொழுதெலாம் சிறக்கட்டும்

பூரிப்பு வளரட்டும்

பொலிவோடு விளங்கட்டும்

பொற்காலம் பிறக்கட்டும்

                                                                          -- இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


2 comments:

Janaki said...

பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள்
கொண்டாடும் நாள்!

MahiShree said...

wah...romba nallarukku jans...nee sonna andha probsku i 'll search solutions...But in opera i'v got a msg that the pop up is blocked... while opening such sites...