20 Jul 2011

கனவில் என்னைக் கண்ட தேவதைக்கு ...


கனவுகளுக்கோ வண்ணமில்லை என்பர் ...
ஏனோ ... நீ என்னைக் கண்ட கனவுக்கு மட்டும் கண்ணே
வண்ணம் பூசிப் பார்த்திருக்க பரவசத்திர்கோர் பஞ்சமில்லை ...!
நீயோ...நெஞ்சமெங்கும் அன்பொழுக எழுதிப்பார்த்த உயிரோவியமானதால் ...
உனக்கென வண்ணங்களைத் தேடுவதில் மட்டுமே கழிக்கிறேன் என் வாரங்களை எல்லாம்...
வரமாக வந்து நீ தந்த வார்த்தைகளை எல்லாம் வரிசையாய்க் கோர்த்து
வாகயைச் சூட்டி விட்டேன் ...உன்னையும் என் சுவாசமாய் ஆக்கி விட்டேன் ...
இனிக்கும் உன் இதழோரம் இயம்பிய புன்னகை எல்லாம்
இன்றைக்கும் இருக்குதடி என் இன்றியமயாதவைப்  பட்டியலில் ...
கனவில் என்னைச் சுமந்த கண்களின் கரையோரக் கரும் மையில்
காலமெல்லாம் கரைந்திருக்க காதலோடு காத்திருக்கிறேன் ...
சத்தமின்றி சாத்திய இமைக்கடையில் வழியும் நீரின் துளி சொல்கிறது ...
இதுவும் நேசத்தின் நிஜமானதொரு பகுதியென்று ...
நித்தமும் கேட்கத் துடிக்கும் உன் உச்சரிப்பின் ஓசையோ பட்டென சாத்துகிறது
இதென்னவோ வெறும் நட்பு மட்டுமே என்று ...
இதற்கிடையில் இன்னலின் இருப்பிடமாய் ஆன என் இதயத்துக்கு
உன் மின்னல் விழிகள் விட்டு விட்டுப்போகும் விடை என்னடி ...???
விருப்பமரிய விழி பார்த்து   வியந்து நிற்கும் உனது அன்பன்

No comments: