16 Feb 2011

நட்புக்காலங்கள்

பள்ளி முடிந்தபின்னும்
வீடு திரும்பாமல்
நண்பர்களுடன்
மாலை ஆறுமணிவரை
வியர்க்க வியர்க்க
ஓடிப்பிடித்து விளையாடியபோது வியர்வயைவிட
அதிகமானது நட்பு.
கல்லூரியில் சேர்ந்தபின்
வீடுதிரும்ப தாமதமானால்
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையாய்
தங்கியபோது பாசத்தைவிட
உயர்ந்தது நட்பு.
வேலை தேடி
அலையும் போது ஒன்றாய்
நேர்முகத்தேர்வுக்கு
சென்று,கிடைக்காத
வேலையைத் திட்டிக்கொண்டே
தோழர்களுடன் சினிமா
சென்றபோது
சுமைதாங்கியானது நட்பு.
வேலைகிடைத்து ஒவ்வொருவரும்
வேறு வேறு ஊர்களுக்கு
சென்றுவிட்டபின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ-மெயிலிலும்,
நண்பர்களுக்குள் கொடுக்கும்
missed callலுமாக
மாறிப்போனது இன்றைய நட்பு...!

No comments: